tamilni 426 scaled
சினிமாசெய்திகள்

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

Share

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

பவதாரிணி மறைவால், இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக நேற்று இலங்கையில் உயிரிழந்தார். இவர், கடந்த 6 மாதங்களாகவே இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, சென்னை தி நகரில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை கொழும்புவில் நடைபெற இருந்த இளையராஜாவின், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இலங்கை சென்றிருந்த அவர் மகளின் இறப்பு செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், இளையராஜாவின் இசைநிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...