tamilni 426 scaled
சினிமாசெய்திகள்

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

Share

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

பவதாரிணி மறைவால், இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக நேற்று இலங்கையில் உயிரிழந்தார். இவர், கடந்த 6 மாதங்களாகவே இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, சென்னை தி நகரில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை கொழும்புவில் நடைபெற இருந்த இளையராஜாவின், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இலங்கை சென்றிருந்த அவர் மகளின் இறப்பு செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், இளையராஜாவின் இசைநிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...