OIF 1
சினிமாசெய்திகள்

செல்பி போதும்.., நிவாரண பொருட்கள் வேண்டாம் என்ற பெண்: கடுப்பான விஜய்

Share

நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய போது நடிகர் விஜயிடம் செல்பி போதும், நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக விஜயிடம் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது வந்த ஒரு பெண் விஜயின் காலில் விழுந்தார். இதனையடுத்து அந்த பெண் போனில் செல்ஃபி எடுப்பதில் மும்மரமாக இருந்தார்.

அதை பார்த்து விஜய் டென்ஷன் ஆனார். செல்ஃபி எடுத்த பின்னர், அந்த பெண் நிவாரண பொருட்களை வாங்காமல் செல்ல, பொருட்கள் வேண்டாமா என்று விஜய் கேட்டார்.

அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று சொல்ல,விஜய் அந்த பெண்ணை போ…போ.. என்று சொன்னார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...