Death body 1 1
உலகம்செய்திகள்

5 மில்லியன் டொலர் பங்களாவில் இந்திய வம்சாவளி குடும்பம் மர்மமான முறையில் மரணம்: பொலிஸார் விசாரணை

Share
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி மற்றும் அவரது மகள் என 3 பேர்கள் அவர்களது வீட்டில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினரும், இளம் வயது மகளும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  மதிப்புள்ள மாளிகையில்  வியாழக்கிழமை உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் கணவர் ராகேஷ் கமல்(57) மனைவி டீனா(54) மற்றும் அவர்களது மகள் அரியானா(18) ஆகிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களது மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் மைக்கேல் மோரிஸ்ஸில் தெரிவித்துள்ளார்.
டீனா மற்றும் அவர்களது கணவர் ராகேஷ் கமல் இருவரும் முன்னதாக EduNova என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குடும்ப வன்முறை காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், கணவரின் உடலுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் மாவட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவரும் யாராலும் கொல்லப்பட்டனரா அல்லது தற்கொலையா என வழக்கறிஞர் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் சம்பவத்தின் மூல காரணத்தை ஊகிக்க மாவட்ட வழக்கறிஞர் மறுத்துவிட்டார், அதற்கு முன்னதாக அவர்களது  மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...