Death body 1 1
உலகம்செய்திகள்

5 மில்லியன் டொலர் பங்களாவில் இந்திய வம்சாவளி குடும்பம் மர்மமான முறையில் மரணம்: பொலிஸார் விசாரணை

Share
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி மற்றும் அவரது மகள் என 3 பேர்கள் அவர்களது வீட்டில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினரும், இளம் வயது மகளும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  மதிப்புள்ள மாளிகையில்  வியாழக்கிழமை உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் கணவர் ராகேஷ் கமல்(57) மனைவி டீனா(54) மற்றும் அவர்களது மகள் அரியானா(18) ஆகிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களது மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் மைக்கேல் மோரிஸ்ஸில் தெரிவித்துள்ளார்.
டீனா மற்றும் அவர்களது கணவர் ராகேஷ் கமல் இருவரும் முன்னதாக EduNova என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குடும்ப வன்முறை காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், கணவரின் உடலுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் மாவட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவரும் யாராலும் கொல்லப்பட்டனரா அல்லது தற்கொலையா என வழக்கறிஞர் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் சம்பவத்தின் மூல காரணத்தை ஊகிக்க மாவட்ட வழக்கறிஞர் மறுத்துவிட்டார், அதற்கு முன்னதாக அவர்களது  மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...