c0YLD4TP7qmtcKeCdMGv
சினிமாசெய்திகள்

யாரையும் நம்ப முடியவில்லை; என்னை பின் தொடர வேண்டாம்..! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதீப்

Share

யாரையும் நம்ப முடியவில்லை; என்னை பின் தொடர வேண்டாம்..! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதீப்

பிக் பாஸ் சீசன் 7 இல் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு தற்போது பெரும் ரசிகர் வட்டாரமே உண்டு. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் யாரையும் நண்பர்களாக இணைத்துக் கொள்ள முடியவில்லை என திடீரென சொல்லியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டிலுள்ள பெண்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டப்பட்டு அவர் வெளியே அனுப்பட்டார்.

இவ்வாறு வெளியே வந்த பிரதீப்க்கு ஆதரவாக பலர் தமது குரல்களை எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட பிரதீப்க்கு வாய்ப்பு வழங்க மறுத்தது பிக் பாஸ்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையும் நண்பர்களாக வைத்து இருக்க நான் விரும்பவில்லை என பிரதீப் கூறி உள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு….
‘எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு யாரும் நண்பர் கோரிக்கைகளை அனுப்ப வேண்டாம். எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட இடமாக இதை பார்க்கின்றேன். அதற்காக உங்களை என் நண்பராக கருதவில்லை என்பதல்ல. தற்போதைய சூழலில் யாரையும் நம்பி என் வாழ்க்கையில் அனுமதிக்கும் இடத்தில் நான் இல்லை என்பதே ஆகும்.

மேலும், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்கள் உள்ளன. சமூக ஊடகங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறைகளின் கலவையாக இருப்பதாக நான் உணர்கிறேன். எனக்கு வரும் விமர்சனத்தை நான் நன்றாக எடுத்துக் கொள்வேன். ஆனால் இதன் மூலம் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனியுரிமை தாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

அதேவேளை, எனது ட்விட்டரில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எனது வாழ்க்கையின் பகுதியை பகிர்ந்து கொள்கிறேன், எனினும் சில விஷயங்களை நான் மிகவும் நெருங்கியவர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என் நிலைமை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்’ என தனது நிலைமையை ரசிகர்களுக்கு எடுத்து சொல்லியுள்ளார் பிரதீப்…

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

jana nayakan300126
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் வாரியம் கேவியட் மனு தாக்கல்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை (Censor) விவகாரம் தற்போது உச்ச...

26 697ca16239330
பொழுதுபோக்குசினிமா

பூமிக்கு வரும் விண்கல்? ராஜமௌலியின் வாரணாசி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பிரம்மாண்டத்தின் உச்சமாகத் திகழும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக்கி...