9 1 scaled
சினிமாசெய்திகள்

வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்

Share

வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்

பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலரை பார்க்க தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. நாளை வெளியாகவிருக்கும் லியோ படத்தின் டிரைலர் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எண்ணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கும்.

இந்நிலையில் லியோ படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குனர் தீரஜ் வைத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ டிரைலர் குறித்து பதிவு செய்துள்ளார்.

இதில் ‘Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்’ என கூறியுள்ளார். இதனால் லியோ டிரைலர் மீது இருந்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

தீரஜ் வைத்தி ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் லியோ படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...