சினிமா

இறந்த விஜய் ஆண்டனி மகள் மீரா கடைசியாக Whatsapp மெசேஜ் செய்துள்ளாரா?

Published

on

இறந்த விஜய் ஆண்டனி மகள் மீரா கடைசியாக Whatsapp மெசேஜ் செய்துள்ளாரா?

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நினைத்து தான் இப்போது தமிழக மக்கள் வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

நேற்று (செப்டம்பர் 19) விஜய் ஆண்டனியின் மகள் மீரா அதிகாலை 3 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் நீண்ட நேரம் கதவை திறக்காததால் பதறிப்போய் அவரது அறை சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பெற்றோர்கள் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

மீரா 12ம் வகுப்பு படித்துவரும் ஒரு சிறுமி, அவருக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீரா குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது அவர் Whatsappல் 2 மனநல மருத்துவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.

மருத்துவர்கள் நேரம் ஒதுக்கிய நிலையில் முன்கூட்டியே சந்திக்க முடியுமா என கேட்டதாகவும் தகவல் பரவுகிறது.

Exit mobile version