சினிமா
எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு
எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தவர் ஹன்சிகா. அவர் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி நான்கே நாளில் மீண்டும் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அவர் தற்போது கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லையே என அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.
“நான் தமிழில் பேசினால் செட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதனால் பேசுவதில்லை. சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன்” என கூறி இருக்கிறார்.
தமிழ் ஓரளவு நன்றாக பேசினாலும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்க்காக ஹன்சிகா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
You must be logged in to post a comment Login