OIP 11
சினிமாசெய்திகள்

விஜய் யாரென்று தெரியாமல் வணக்கம் வைக்கும் பாட்டி… சிரித்துக் கொண்டே நிவாரண பொருட்களை வழங்கும் விஜய்

Share

தமிழக மாவட்டமான நெல்லையில் கனமழையால் பாதித்த மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.

இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நடிகர் விஜய்சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் வந்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு, வரிசையாய் வந்த பொதுமக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

அப்போது அங்கு வந்த பாட்டி ஒருவர் விஜய் யாரென்று தெரியாமல் ஆள் மாறி அருகில் இருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார். இதைப் பார்த்து நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், நான் தான் விஜய் என்று கூறி அவரே நிவாரண பொருட்களை பாட்டி கையில் வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...