4 3
சினிமாசெய்திகள்

மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்

Share

மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்

ஸ்பெயின் (Spain) நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும் சேற்றை வீசி கொலைகாரர்கள் எனவும் மக்கள் கூச்சலிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் தற்போது கடும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் 200 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையிலே, கடந்த செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று குடியிருப்பாளர்களை வலியுறுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஏன் வெள்ளம் பெருக்கெடுத்த பிறகு அனுப்பப்பட்டது என்ற கோபத்தினாலேயே மக்களை பார்வையிட வந்த மன்னர் மற்றும் ராணியார் மீது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் நடந்த துயர சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் Pedro Sánchez மற்றும் வலென்சியாவின் பிராந்திய தலைவர் Carlos Mazón ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்பாராமல் மக்கள் சேற்றை வீசவும் மெய்க்காப்பாளர்கள் குடைகளைப் பயன்படுத்தி பிரதமரை விரைவாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். ஆனால் மன்னர் பெலிப் தமது பயணத்தை தொடர்ந்ததுடன், பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிராந்தியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நகரத்திற்குச் செல்வதற்கான மன்னரின் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக ஸ்பெயினின் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மையம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மேலும் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...