உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்
சினிமாசெய்திகள்

உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்

Share

உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள உலகின் நீண்ட ரயில்வே சுரங்கப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள Gotthard Base Tunnel, உலகிலேயே நீளமான ரயில்வே சுரங்கப்பாதையாகும். அது, ஆல்ப்ஸ் மலையின் ஊடாக அமைக்கபட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதையின் நீளம் 57 கிலோமீற்றர் ஆகும்.

ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
அந்த ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மீண்டும் அந்த பாதையில் போக்குவரத்து துவங்க, 16ஆம் திகதி வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையில் ரயில் தடம் புரண்டதால், மாற்றுப்பாதை ஒன்றில் சில பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், பயணிகள் கூடுதலாக ஒரு மணி நேரம் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரயிலின் தடம் புரண்ட சில பெட்டிகளில் அபாயகரமான ரசாயனங்களும் உள்ளன என்றாலும், எந்தப் பெட்டியிலும் கசிவு எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...