விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. விஜய் சேதுபதி தான் இந்த வருடமும் தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் வார இறுதியில் வீட்டுக்கு வந்த விஜய் சேதுபதி போட்டியாளர்கள் எல்லோரிடமும் ஆரம்பத்தில் இருந்தே மிக கண்டிப்புடன் பேசி இருக்கிறார்.
போட்டியாளர்கள் பெயர்கள் நினைவில்லை, அதனால் பெயர்களை சொல்லுங்கள் என விஜய் சேதுபதி சொல்ல எல்லோரும் வரிசையாக எழுந்து சொன்னார்கள். ஆனால் ஆதிரை மட்டும் உட்கார்ந்துக்கொண்டே சொன்னார்.
அதற்கு விஜய் சேதுபதி அவர் அலட்சியமாக பேசுவதாக சொல்லி கண்டித்தார்.
இந்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. “எழுந்து நிற்காதது ஒரு குற்றமா, கமல்ஹாசன் மட்டும் இருந்திருந்தால்.. ” என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.