tamilni 368 scaled
சினிமாபொழுதுபோக்கு

மறைந்த பவதாரணியின் கையெழுத்தில் லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்? கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டு

Share

மறைந்த பவதாரணியின் கையெழுத்தில் லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்? கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டு

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உயர்ந்த பவதாரிணியின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக கங்கை அமரன், இசையமைப்பாளர் தீனா மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் வைத்த குற்றச்சாட்டு இசையமைப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா, கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதிலும் தானே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக தங்களிடம் கரராக நடந்து கொண்டார் என கங்கை அமரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.

அது மட்டும் இன்றி தீனா மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளையும் கங்கை அமரன் முன் வைத்தார். அதன்படி அவர் கூறுகையில்,

இது இளையராஜா அமர்ந்திருக்க வேண்டிய இடம். எங்கள் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியும் தானே. அதனால் அவரால் வர முடியவில்லை. அவருக்கு பதில் நான் பேசிக் கொண்டிருக்கின்றேன்.

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ஒவ்வொருவருக்கு இரண்டு ஆண்டுகள் தான் பதவி என்பது விதி. ஆனால் இசையமைப்பாளர் தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி நான்கு ஆண்டுகள் தலைவராக பதவி வகித்துவிட்டார்.

இனியும் தானே ஆளப்போவதாக கூறுகிறார். ஒருவர் பதவி வகிப்பதை காட்டிலும் அனைவரும் பதவி வகித்து சங்கத்தை திறம்பட வழி நடத்த வேண்டும் என்பது தான் இளையராஜா போன்றவர்களின் கருத்து.

அதுமட்டுமின்றி, இந்த ஜூனியனில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளார் தீனா.

அது இவர்களாக தயார் செய்த ஆவணங்கள். மேலும் மறைந்த பவதாரணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போட்டு இருக்கிறார்கள். ஆகமொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை அவர் பணத்தை சுருட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே பதவி போய்விட்டால் சிக்கி விடுமோ என்கின்ற பயத்தில் தான் மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்க தீனா திட்டமிடுகிறார் என கங்கை அமரன் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...