FkFWM7BaYAI2tr3 e1671207341945
சினிமாபொழுதுபோக்கு

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா

Share

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’, மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அட்லி, தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அட்லி – பிரியா திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் சமீபத்தில் ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் கர்ப்பகால புகைப்படங்களும் அவர்களது சமூக வலைதளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. மேலும் ப்ரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அட்லி-ப்ரியா அட்லி தம்பதிகள் பெற்றோர் ஆகி உள்ளதாகவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அட்லி மற்றும் ப்ரியாவின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிந்து வருகின்றனர்.

#Cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...