tamilnaadiv scaled
சினிமாபொழுதுபோக்கு

ICUவில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை

Share

ICUவில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து படங்கள் நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அருந்ததி நாயர்.

இவர் தமிழில் விஜய் ஆண்டனியின் சைத்தான், பொங்கியெழு மனோகரா, பிஸ்தா, கன்னிராசி, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துள்ளார்.

இவர் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

3 வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலை தேறவில்லை, தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறாராம்.

அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் ரூ.2 லட்சம் செலவு ஆவதாகவும், இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...