24 6605451e56ffb
சினிமாபொழுதுபோக்கு

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

Share

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் பல ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சரண். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் என இதுவரை அஜித்தின் நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று வட்டாரம். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் ஓடவில்லை என்றாலும், தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாக மாறியுள்ளது.

இப்படத்தை எடுத்து முடித்தபின் அஜித்திற்கு போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் சரண். படத்தை பார்த்து முடித்தபின், இந்த கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேனே, ஏன் என்னிடம் சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் கோபப்பட்டாராம்.

ஆனால், வட்டாரம் திரைப்படத்தில் ஆர்யா போன்ற வளர்ந்து வரும் ஹீரோ நடித்தால் தான் சரியாக இருக்கும் என அஜித்திடம் கூறினாராம் சரண். இந்த தகவலை இயக்குனர் சரண் சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...