20 12
அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

Share

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வளர்க்கின்றார்கள்.

இந்து மதத்தின்படி, துளசிச் செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுவதுடன் வீடுகளில் வைப்பதற்கான முக்கிய காரணம், துளசிச் செடி இலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட துளசிச் செடியை வளர்ப்பவர்கள் அதனை பொருத்தமான திசையில் வைத்தால் அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு நன்மை கிடைக்கும்.

துளசிச் செடி அதிர்ஷ்டமான செடியாக பார்க்கப்படுகின்றதனால் இந்தச் செடியை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் துளசிச் செடியைப் பார்த்த பின் ஒரு நாளை ஆரம்பித்தால் அன்றைய நாள் அமைதியாகவும் நிம்மதியாகவும் கடந்து செல்லும் என ஒரு சிலர் நம்புகின்றனர்.

அந்த வகையில் ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்திரம் படி துளசிச் செடியை எந்த திசையில் வைக்கலாம் என்பது குறித்து பின்வருமாறு நோக்கலாம்.

1. வீட்டில் துளசிச் செடி வளர்க்கும் பொழுது வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வளர்க்க வேண்டும். இவை இரண்டும் நீரின் திசை என்பதால் வீட்டிற்குள் வரும் எதிர்மறையான சக்திகள் அழிந்து விடும்.

2. துளசிச் செடியை கவனமாக வளர்க்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் வளர்க்கும் துளசிச் செடி காய்ந்து போகக் கூடாது. ஆகையால் வீட்டிலுள்ள பெண்கள் அதனை கவனமாக பார்த்து கொள்வார்கள். அப்படி பார்த்தும் காய்ந்து போனால் அது வீட்டிற்கு ஏதோ தீய விடயம் நடக்க போகின்றது என்பதனை குறிக்கிறது.

3. வாஸ்துப்படி, வீட்டின் தென்கிழக்கு பகுதி “நெருப்பின் திசை” எனப்படும் திசையில் துளசிச் செடி வைக்கக் கூடாது. மேலும் துளசி செடியை தரையில் நடக் கூடாது. மாறாக தொட்டியொன்றில் நடுவது சிறந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...