நடிகர் விஜய்யிடம் பிடிக்காத ஒரு விஷயம், ஓபனாக கூறிய நடிகை த்ரிஷா- என்னது தெரியுமா?
ஒரு ஜோடி ஹிட்டானால் அவர்களை அடுத்தடுத்த படங்களில் காண ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் விஜய்-த்ரிஷா இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி சமீபத்தில் லியோ என இணைந்து நடித்துள்ளனர்.
அண்மையில் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கில்லி படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர் விஜய் பற்றி பேசியதாவது, படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாக இருப்பார், யாரிடமும் பேச மாட்டார்.
ஷுட் முடிந்தால் போதும் ஒரு சேரை எடுத்துப் போட்டுக்கொண்டு சுவருக்கு பக்கத்தில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.
சில சமயம் அவர் அமைதியாக இருப்பதை பார்த்தால், ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என்றுகூட தோன்றும், அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என கூறியுள்ளார்.
Comments are closed.