சினிமா
விஜய் டிவி மீது கடும் கோபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா… நடந்தது என்ன?
விஜய் டிவி மீது கடும் கோபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா… நடந்தது என்ன?
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே. தனது ஜாலியான பேச்சுக்கும் கலகல சிரிப்புக்கும் பெயர் போனவர். ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாத முகமாக இருந்தாலும் இப்போது இவரை தெரியாத மக்களை இல்லாத அளவுக்கு வளந்துள்ளார்.
மூன்று முறை தொடர்ச்சியாக சிறந்த பெண் தொகுப்பாளினி விருது பெற்றவர். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான இவர் . தொடர்ந்து விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குகிறார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் இறுதி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், விஜய் டிவிக்காக நான் அதிகமாகவே உழைக்கிறேன் ஆனால் சம்பளம்தான் உயர்த்தி தர மாட்டேன் என்கிறார்கள் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.