அழகுக் குறிப்புகள்
கைகளில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? சில அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக


நம்மில் பல பெண்கள் தங்களுடைய அழகினை மேம்படுத்த பலவகையான அழகு குறிப்புகளை பின் பற்றி வருகின்றனர்.
அதிலும் சரும அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இருப்பினும் கை கால்களில் உள்ள கருமைகளை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இதன் விளைவாக அந்த பகுதி பார்ப்பதற்கு மிகவும் கருமையாக மற்றும் அசிங்கமாக காணப்படும்.
எனவே இந்த கை கால் கருமை நீங்க சில வகையான அழகு குறிப்பு உள்ளன. தற்போது அவற்றை என்ன என்பதை பார்ப்போம்.
- பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.
- பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.
- மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.
- தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
- தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.
#Beauty Tips