இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

- முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து, இந்த முட்டை ஓட்டு பொடியை பயன்படுத்தி எளிதினில் முக அழகை பராமரிக்கலாம்
- முட்டை ஓட்டு பொடியை முட்டையின் வெள்ளை கருவோடு ஒன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவ வேண்டும். உலர்ந்த பின்னர் கழுவி விடுங்கள். உடனடியாகவே உங்கள் முகம் பிரகாசம் ஆகியிருப்பதை நீங்கள் உணர முடியும். வாரம் இருமுறை நீங்கள் செய்தால் நன்மை தரும்.
- முட்டை ஓட்டு பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து பசைபோல செய்து அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் வெயிலால் கறுத்து களையிழந்து முகம் ஜொலிக்கும்.
- 2 டீஸ்பூன் முட்டை ஓட்டு பொடியுடன் தேன், கடலை மாவு போட்டு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி விடுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.
- 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கும் முன் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருக்கும்.
#BeautyTips #Skincare
Leave a comment