தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாளை (பெப்ரவரி 02) ராஜஸ்தானில் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
உதய்பூரில் பிரம்மாண்டமான திருமண அலங்காரப் பணிகள் நடைபெறுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் ரகசியமாக நடந்திருந்தது. ராஷ்மிகாவின் விரலில் மின்னிய வைர மோதிரம் மற்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் அளித்த மர்மமான பதில் ஆகியவை இதனை உறுதிப்படுத்தின.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது காதல் குறித்துப் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், வழக்கம் போலவே இந்தத் திருமணச் செய்தி குறித்தும் இரு நடிகர்களின் தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த ‘கியூட்’ ஜோடி ஒரு வழியாகத் தங்களது பந்தத்தை உறுதிப்படுத்துவார்களா என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.