நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி அவர்கள் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திராதேவி சமீபத்தில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றார் என்றும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவியின் உடல் இன்று காலை 9 மணிக்கு பத்மாலயா ஸ்டூடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகேஷ்பாபு தாயார் மரணம் குறித்து தகவல் அறிந்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திராதேவி அவர்களின் மறைவு என்னை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது என்றும் மகேஷ்பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
#Maheshbabu
Leave a comment