ashwin
பொழுதுபோக்குசினிமா

‘கிறுக்கா கிறுக்கா உனையே ரசித்தேன்’ – இணையத்தை கலக்கும் அஸ்வின்- ஷிவாங்கி ஆல்பம்

Share

‘கிறுக்கா கிறுக்கா உனையே ரசித்தேன்’ – இணையத்தை கலக்கும் அஸ்வின்- ஷிவாங்கி ஆல்பம்

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறது அஸ்வின் – ஷிவாங்கி இணைந்து கலக்கியுள்ள புதிய ஆல்பம் பாடல்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி.

ஆல்பம் பாடல்கள், விளம்பர படங்கள் என தனித்தனியாக கலக்கி வந்த இருவரும், தற்போது வெள்ளித்திரையில் படுபிஸியாக உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘அடிபொலி’ என்ற ஆல்பம் பாடலில் இணைந்துள்ளனர் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி. நேற்று 20ம் திகதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் ஷிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து இப் பாடலை பாடியுள்ளனர். இப் பாடலில் அஸ்வின் நடித்துள்ளார்.

அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணையமாட்டார்களா என காத்திருந்த ரசிகர்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றியுள்ள இந்த ஆல்பம் பாடல் தற்போது மிகப்பெரும் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...