நன்றாக கல்வி கற்று முடித்த பின்பு அனைவருக்கும் சுலபத்தில் வேலை கிடைத்து விடவில்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது.
ஆக மொத்தத்தில் நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும் நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.
அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது.
எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.
மேற்கண்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான வகையில் தேர்ச்சி பெறுவார்கள்.
மேலும் நீண்ட நெடுங்காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்லவேளை அம்பாளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெறுவார்கள்.
#LifeStyle
Leave a comment