Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

சிஇஒ ஆனார் எலான் மஸ்க்

Share

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 700 கோடி கொடுத்து வாங்கினார்.

ஸ்பேஸ்-எக்ஸ், நியூராலின்க் ஸ்டார்ட்-அப், போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். ட்விட்டரை முழுமையாக தன்வசமாக்கிய எலான் மஸ்க், ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரை பணி நீக்கம் செய்தததாக கூறப்படுகிறது.

இத்துடன் ட்விட்டர் வெரிபிகேஷன் சேவையை வைத்திருக்க கட்டணம் செலுத்தும் முறையையும் எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்களை முறியடிக்க முடியும் என்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவீனங்களுக்கும் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

செக்யுரிட்டி ஃபைலிங்கில் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்று இருப்பதை எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். மற்றொரு ஃபைலிங்கில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை இயக்குனராக தான் பதவி வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் குழு நீக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமான ஒன்று தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...