puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

Share

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்கே பங்கு உண்டு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சயன்ஸ் (Science) என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, ஒருவரின் ஆயுள்காலத்தைத் தீர்மானிப்பதில் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது. விபத்துகள் அல்லது தொற்றுநோய்கள் போன்ற வெளிப்படையான காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு மனிதரின் ஆயுட்காலத்தில் 55 சதவீதம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

டென்மார்க், ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்களின் ஆயுட்கால தரவுகளைக் கொண்டு இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

கடந்த காலங்களில் தொற்றுநோய்களாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணங்கள் அதிகமாக இருந்ததால், மரபணுவின் உண்மையான தாக்கம் மறைக்கப்பட்டிருந்தது.

தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ள நிலையில், மரபணுக்களே நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மீதமுள்ள 45 சதவீத வாய்ப்பு உணவு மற்றும் வாழ்க்கை முறையிலேயே உள்ளது என்பதை விஞ்ஞானிகள் நினைவூட்டுகின்றனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...