tamilni Recovered 5 scaled
உலகம்செய்திகள்

காசா மீது எறியப்படும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்: அலறும் பாலஸ்தீனியர்கள்

Share

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலின் போது இஸ்ரேல் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது அத்துமீறி திடீர் தாக்குதலை தொடங்கிய பிறகு, போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் தனது பதிலடி தாக்குதலை தொடங்கியது.

இதையடுத்து காசாவில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.

சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து இருப்பதுடன், இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் ஒன்று குறி தவறி காஸாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் போர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் அலறுகின்றனர்.

இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டு பாலஸ்தீனியர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் என்பது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழக் கூடியது.

நெருப்புக் கோளமாக வெடித்துச் மனிதர்களை தீவிர தீக்காயங்களுடன் நடைபிணமாக முடக்கக்கூடியவை.

இவற்றை போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அதை போர்களில் பயன்படுத்துவது போர் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...