2 10 scaled
உலகம்செய்திகள்

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

Share

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன், செசன்ய புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அவர் அந்த கொடூரச் செயலைச் செய்யும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் காசா போரால் உலகம் பரபரப்படைந்துள்ள இந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சிலிருக்கும் எந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் தீவிரவாதம் தொடர்பான பின்னணி உள்ளது என்று கண்டறிந்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றலாம் என்பது குறித்து மீளாய்வு செய்ய, தனது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த ஆசிரியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு கொலை முயற்சி சம்பவத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞர், ஏற்கனவே தீவிரவாத தொடர்பில் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

அவரும், கைது செய்யப்படும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...