tamilni 180 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்

Share

இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்கும் மெக்டொனால்ட்ஸ்

ஹமாஸுடன் போர் தொடுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கு மெக்டொனால்ட்ஸ் இலவச உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிராக நடந்து வரும் போரில் இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக லெபனானில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலின் மெக்டொனால்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

“நாங்கள் ஏற்கனவே மருத்துவமனைகள் மற்றும் இராணுவப் பிரிவுகளில் 4,000 பேருக்கு உணவை வழங்கினோம். ஒவ்வொரு நாளும் களத்தில் உள்ள வீரர்களுக்கு உணவளிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

மேலும் இந்த நோக்கத்திற்காக ஐந்து உணவகங்களைத் திறந்துள்ளோம்” என்று இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் அக்டோபர் 13 அன்று இஸ்ரேலிய படைகளுக்கு இலவச உணவு வழங்கும் நிறுவனமான மெக்டொனால்டின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

லெபனானின் ஸ்பின்னீஸில் உள்ள மெக்டொனால்டு பாலஸ்தீனிய குழுக்களால் தாக்கப்பட்டது.

இந்த பின்னணியில், மெக்டொனால்டு ஓமன், காசாவை ஆதரித்து டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.

மெக்டொனால்டு ஓமான் நிறுவனம் காசாவில் உள்ள முயற்சிகளுக்கு $100,000 நன்கொடை அளித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த கடினமான காலங்களில் நாங்கள் காசாவுக்கு ஆதரவாக நிற்கிறோம். நாம் அனைவரும் காசா மக்களுக்கு உதவுவோம்” என்று மெக்டொனால்ட்ஸ் ஓமான் கூறியுள்ளது.

இந்நிலையில், காசாவில் அக்டோபர் 7ஆம் திகதி நடந்த சண்டையில் இருந்து 724 குழந்தைகள் உட்பட மொத்தம் 2,215 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே காலகட்டத்தில் இஸ்ரேலில் 1,300 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...