7 5 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸின் முக்கிய தளபதி வான்தாக்குதலில் பலி!

Share

ஹமாஸின் முக்கிய தளபதி வான்தாக்குதலில் பலி!

ஹமாஸ் குழுவின் முக்கிய தளபதி வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 9வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸின் நக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு காஸா மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புப்படை எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என முப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....