rtjy 175 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.

“இஸ்ரேலில் வேலை தேடும் சாத்தியமுள்ள பணியாளர்கள் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்திடம் (PIBA) அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எந்தவொரு விசா நடைமுறையையும் செயற்படுத்துவதற்கு இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளையும் அனுமதியையும் பெற வேண்டும்” என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் பரிந்துரைகள் இன்றி அனுமதி வழங்க உள்ளூராட்சி அதிகாரிகள் சிலர் குறுக்கு வழியில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுமட்டுமன்றி 100க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை தற்போது பெற்றுள்ளதாகவும், அதில் 15 விசா அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...