rtjy 170 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம்

Share

பிரித்தானிய விமானப்படையால் நடுவானில் வழிமறிக்கப்பட்ட விமானம்

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதால் விமானப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த கென்யன் ஏர்வேஸ் விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு வழிநடத்தியுள்ளன.

அந்த விமானம் பிரான்ஸ் வான்வெளியில் பறக்கும் போது, பிரித்தானிய அதிகாரிகளுக்குக் கிடைத்த எச்சரிக்கையை அடுத்து, உடனடியாக பிரித்தானிய போர் விமானங்கள் அந்த விமானத்தை வழிமறித்துள்ளதாக தெரியவருகின்றது.

விமானம் தரையிறங்கியதும், ஏராளமான ஆயுதம் ஏந்திய பொலிஸார் விமானத்தை சூழந்துகொள்ள, பயணிகள் குழப்பமடைந்துள்ளார்கள்.

இதேவேளை அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

எதனால் அந்த விமானம் வழிமறிக்கப்பட்டு ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

குறித்த விமானத்தில் பிரச்சினை ஏற்பட்டால் மற்ற விமானங்களுக்கும், அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு போன்ற அபாயம் இல்லை என்றும், விமானத்திலிருந்த சில பயணிகள் தொடர்பில் எச்சரிக்கை கிடைத்ததாலேயே பொலிஸார் விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தியதாகவும் கென்யா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...