இலங்கைசெய்திகள்

குமார் தர்மசேனவை கைது செய்ய உத்தரவு

rtjy 158 scaled
Share

குமார் தர்மசேனவை கைது செய்ய உத்தரவு

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார் தர்மசேனவே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாரஹென்பிட்டி பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து வீட்டில் வசிப்பவரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குமார் தர்மசேன நிறுவனம் ஒன்றின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மசேன, அவரது மனைவி மற்றும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் தர்மசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குமார் தர்மசேன தற்போது உலகக் கிண்ண போட்டி கடமைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...