tamilni 147 scaled
உலகம்செய்திகள்

இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்

Share

இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர்

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தமேயில்லாமல் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இணையத்தில் கடுமையாக கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார்.

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கனடா இந்திய தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சம்பந்தமேயில்லாத நாடுகளுடன் எல்லாம் இந்தியா குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.

முதலில் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான Mohamed Bin Zayedஉடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரூடோ, பின்னர் ஜோர்டான் நாட்டின் மன்னரான Abdullah II bin Al-Husseinஉடன் இந்தியா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்படி இந்தியா கனடா பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத நாடுகளுடன் எல்லாம் ட்ரூடோ பேசி வருவதையடுத்து, இணையத்தில் அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

ட்ரூடோ குறித்த பல வேடிக்கையான மீம்கள் இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ளன.

Share
தொடர்புடையது
1733038624 vehicle import
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதிகள் 2026 இல் இயல்பு நிலைக்குத் திரும்பும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின்...

25 6787f6ba5e006
செய்திகள்உலகம்

AI சகாப்தத்தில் தொடரும் பணிநீக்கங்கள்: மெட்டா நிறுவனத்தில் 600 ஊழியர்களுக்குப் பணி நீக்கம்!

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில்,...

gold01
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்: ஒரே வாரத்தில் ரூ. 77,000 குறைவு!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது....

10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029
செய்திகள்இலங்கை

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி...