tamilni 123 scaled
உலகம்செய்திகள்

காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

Share

காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

காஸா எல்லையை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், நடன விருந்துகளிலும் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவிற்கு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 700 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 காஸா மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர், பலர் தெருக்களில் மற்றும் பாடசாலைகளில் குவிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

காஸாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறை உடல்களால் நிரம்பி வழிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்க அதிக இடவசதி இல்லாததால், அவற்றை விரைந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஹமாஸ் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உள்ளடங்களாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலில், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...