tamilni 87 scaled
இலங்கைசெய்திகள்

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

Share

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

40இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் யாழ். பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றிரவு தொடக்கம் பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் (09.10.2023) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரது வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்த போது சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் மீது காலிற்கு கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தி காயம் ஏற்படுத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...