rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

Share

அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மின் விநியோகம்

தொடரும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கடும் மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு (07.10.2023) தீர்மானித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 600 முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு போன்ற பல மாகாணங்களில் மழை பெய்துள்ளதுடன், மாத்தறை மாவட்டமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...