rtjy 91 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

Share

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தை பொலிஸார் தற்கொலையா அல்லது படுகொலை சம்பவமாக என்பது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க உள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்,இந்த சம்பவம் கொலையாக இருப்பின் அதற்கான காரணத்தை அடையாளப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

நியூ ஜெர்சி மாகாணத்தின் Plainsboro பகுதியிலேயே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 4.30 மணியளவில் பொலிஸார் குடியிருப்பு ஒன்றில் இருந்து இரு சிறார்கள் உட்பட நால்வரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், 43 வயதான தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி 42 வயதான சோனல் பரிஹார், இவர்களின் 10 வயது மகன் மற்றும் 6 மகள் ஆகயோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றதாகவும் அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...