rtjy 91 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

Share

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தை பொலிஸார் தற்கொலையா அல்லது படுகொலை சம்பவமாக என்பது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க உள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்,இந்த சம்பவம் கொலையாக இருப்பின் அதற்கான காரணத்தை அடையாளப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

நியூ ஜெர்சி மாகாணத்தின் Plainsboro பகுதியிலேயே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 4.30 மணியளவில் பொலிஸார் குடியிருப்பு ஒன்றில் இருந்து இரு சிறார்கள் உட்பட நால்வரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், 43 வயதான தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி 42 வயதான சோனல் பரிஹார், இவர்களின் 10 வயது மகன் மற்றும் 6 மகள் ஆகயோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றதாகவும் அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...