rtjy 86 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக, இது ஒரு பேனாவை போல தோற்றம் கொண்டிருந்தாலும், அதை ஆராயும் போது அதில் போதைப்பொருள் சிகரெட் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பாவனையானது தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...