இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

rtjy 86 scaled
Share

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக, இது ஒரு பேனாவை போல தோற்றம் கொண்டிருந்தாலும், அதை ஆராயும் போது அதில் போதைப்பொருள் சிகரெட் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பாவனையானது தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...