3 31 scaled
உலகம்செய்திகள்

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு

Share

மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை அடுத்து 42 விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கவும் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணிகள் விமான போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து வணிக ரீதியான விமான நிலையங்களிலும் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செபு, பிகோல், தாவோ மற்றும் பலவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்றே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செபு மற்றும் பலவான் தீவுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவியும் பிரபலமான பகுதிகளாகும்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...