rtjy 58 scaled
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு

Share

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையினால் மேலும் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் அக்குரஸ்ஸ, அத்துரலிய, கம்புருபிட்டிய, திஹாகொட, மாலிம்படை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெள்ளத்தில் சிக்கியுள்ள மாத்தறை, கம்புறுபிட்டிய, கத்துவ கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இன்றும் நாளையும் மூடுவதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, மாத்தறை நில்வளா கங்கை பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மாத்தறை மாவட்டம் பெரும் அபாயச் சூழலுக்கு உள்ளாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...