8 24 scaled
உலகம்செய்திகள்

‘ஆண் ஆண் தான் பெண் பெண் தான்’ பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை கருத்து

Share

‘ஆண் ஆண் தான் பெண் பெண் தான்’ பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை கருத்து

திருநங்கைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தனது நிறைவு உரையில் பாலின விவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை ரிஷி சுனக் பகிர்ந்து கொண்டார். ‘ஒரு ஆண் ஆண் தான் மற்றும் ஒரு பெண் பெண் தான்’ என்று அவர் கூறினார்.

அவர் கூறுகையில் “மக்கள் தாங்கள் விரும்பும் பாலினமாக இருக்கலாம் – அவர்களால் முடியாது என்று நம்புவதற்கு நாம் கொடுமைப்படுத்தப்படக்கூடாது. ஒரு ஆண் ஆண் தான் மற்றும் ஒரு பெண் பெண் தான். அதை புரிந்து கொள்ள பொது அறிவு போதும்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, சுனக்கின் கருத்துகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பலர் கோபமடைந்தனர். அவருடைய கருத்துக்கள் “பொது அறிவுக்கு” வெகு தொலைவில் இருப்பதாக சிலர் அவரை கேலி செய்தனர்.

பிரித்தானியாவை உள்ள பெண் மருத்துவமனை வார்டுகளில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதை தடை செய்யும் திட்டத்தை அக்டோபர் 3-ஆம் திகதி சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே முன்மொழிந்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆசியாவில் பிறந்த முதல் பிரித்தானியப் பிரதமர் என்பதில் பெருமை கொள்வதாகவும் ரிஷி சுனக் கூறினார். பிரித்தானியா இனவெறி நாடு அல்ல என்பதற்கு அவரது நியமனம் சான்றாகும் என்றார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...