2 23 scaled
உலகம்செய்திகள்

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக அனுப்பி டார்ச்சர்

Share

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக அனுப்பி டார்ச்சர்

தமிழக மாவட்டம், திருச்சியில் ஒன்லைன் லோன் அப்பின் மூலம் கடன் வாங்கிய பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். இதனால் வருமான பற்றாக்குறையால், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒன்லைன் அப் ஒன்றில் ரூ.7,000 கடன் வாங்கியுள்ளார்.

பின்பு, அக்டோபர் 02 ஆம் திகதி பெற்ற கடனுக்கான தவணை மற்றும் முழுத்தொகையினையும் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் செயலி நிறுவனத்தில் இருந்து இந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது இவர், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

அதற்கு, ரசீதை அனுப்புமாறு செயலி தரப்பில் இருந்து கூறப்பட்டது. அதனால், வாட்ஸ் அப் எண்ணிற்கு ரசீதை அனுப்பி வைத்தார்.

பின்பு, பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், பெண்ணின் போட்டாவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, போட்டோ அனுப்பிய ஒன்லைன் செயலி நம்பருக்கு அழைத்த போது, கடன்வாங்கிய முழு தொகையையும் செலுத்தவில்லை என்றால் இந்த படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், திருச்சி மாநகர சைபர் க்ரைம் பொலிசில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....