Connect with us

இலங்கை

ஐ.நாவில் இலங்கையை கடுமையான சாடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Published

on

tamilni 51 scaled

ஐ.நாவில் இலங்கையை கடுமையான சாடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டதே இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது உரையில், கடந்த பல ஆண்டுகளாக இலங்கையின் பத்துக்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நிறுவியும் எந்த முடிவும் இல்லை.

ஆணைக்குழுக்களை நிறுவுதல் என்பது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான இலங்கையின் கருவியாகும்.

இம்முறை, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிட்டு தன்னை நியாயப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.

ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது தென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் என்பது பாதிக்கப்பட்டவர்களால் முன்மொழியப்பட்டதும் நிர்வகிக்கப்பட்டதுமாகும்.

ஆனால் இலங்கையில் பாரிய அட்டூழியங்களை நிகழ்த்திய வெற்றியாளர்களே இதன் முயற்சியை முன்வைக்கின்றனர். இதேபோன்ற வழிகளில் தொடங்கப்பட்ட முந்தைய ‘உண்மைக்கான ஆணையங்கள்’ தோல்வியடைந்துள்ளன.

ஏனெனில் நியமிக்கப்பட்ட ஆணையங்கள் பாதிக்கப்பட்டவர்கள் நம்பவில்லை. ஆணையங்களிடம் வாக்குமூலம் வழங்க முன்வந்த பல பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தரப்பினராலும் மிக மோசமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையின் முன்மொழியப்பட்ட “உண்மை ஆணையத்தை” பரிசீலிப்பதற்கு முன்னர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதியைப் பெறவழிகோள வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையினை வலியுறுத்துகிறோம் என மணிவண்ணன் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்

இன்றைய ராசி பலனை (ஜூலை 4, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண...

4 3 4 3
இலங்கை2 நாட்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை2 நாட்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்2 நாட்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை2 நாட்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...