tamilni 39 scaled
இலங்கைசெய்திகள்

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

Share

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை 2023இல் பதிவு செய்யப்பட்ட 541 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒகஸ்டில் பதிவான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜூன் 2023இல் தொழிலாளர்கள் அனுப்பிய தொகையில் மொத்தம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஆகஸ்ட் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 26,131 ஆகவும், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 உடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 197,146 ஆகவும் இருந்தது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...