tamilni 13 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 சிறுவர்கள் பாதிப்பு

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 சிறுவர்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை ஏற்றம், தொழில் வாய்ப்பின்மை, வறுமை, உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

Share
தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...