உலகம்செய்திகள்

லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்

Share

லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்

மேற்கு லண்டனில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்து பெண்களுக்கு பலாத்கார அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாகவே அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சீக்கியரான ஹர்மன் சிங் கபூர் என்பவரின் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டதுடன், அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

உணவக உரிமையாளரான ஹர்மன் சிங் கபூர் குடும்பத்தினர் தெரிவிக்கையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாகவும், பலாத்கார மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காலிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத பிரித்தானிய சீக்கியர்களுக்கு சமீப காலமாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்திய உயர் ஸ்தானிகரின் லண்டன் அலுவலகம் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட அடுத்த நாள் ஹர்மன் சிங் கபூரின் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்கொட்லாந்திலுள்ள குருத்வாரா ஒன்றின் முன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூவர் கொண்ட குழுவே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் ஸ்கொட்லாந்தில் குடியிருப்பவர்கள் அல்ல எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் காலின் ப்ளூம், இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இந்த காலிஸ்தான் இயக்கம் என அழைக்கப்படும் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தற்போது குருத்வாராக்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் காலின் ப்ளூம் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...