7 25 scaled
உலகம்செய்திகள்

கனடா பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த அமெரிக்கா

Share

கனடா பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த அமெரிக்கா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமெரிக்க வெளியுறவுச் செயலரும் நேற்று சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தார்கள்.

முன்னதாக இந்த சந்திப்பு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinken, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும்போது, கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் தொடர்பில் நிச்சயம் பிரச்சினையை எழுப்புவார் என்று கூறியிருந்தார்.

ஆனால், கனடா பிரதமருக்கு ஏமாற்றம்தான் பதிலாக கிடைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலரான Antony Blinkenம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், இரு நாட்டு வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர்களும் சந்தித்தபின் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், கனடா இந்திய பிரச்சினை குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

ஆக, கனடா இந்திய மோதல் குறித்து பேசுவதில், அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவின் மற்ற நட்பு நாடுகளும் கவனமாகவே இருக்கின்றன.

சீனாவிடமிருந்து மேற்கத்திய நாடுகளை பாதுகாக்கும் ஒரு தடுப்புச்சுவராக இந்தியா மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்படுகிறது என்பது பலரும் அறிந்த விடயம். ஆக, இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் மேற்கத்திய நாடுகள் பல கவனமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...