rtjy 277 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாரமாக இருக்க விரும்பாத வயோதிப பெண்ணின் முடிவு

Share

யாழில் பாரமாக இருக்க விரும்பாத வயோதிப பெண்ணின் முடிவு

யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் பாய்ந்து வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் மீசாலை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மீசாலை பகுதியை சேர்ந்த 65 வயதான கி.நாகேஸ்வரி என்பவரே தொடருந்து தண்டவாளத்தில் படுத்து தன் உயிரை மாய்த்துள்ளார்.

வயது மூப்பின் காரணத்தினால் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதை விரும்பாத காரணத்தினால் உயிரை மாய்த்துள்ளதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடக்க முடியாத நிலையில் கூனிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக நடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...

ஹர்ச நாணயக்கார
இலங்கை

செம்மணி தொடர்பில் புதிய சர்ச்சை – அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்கள்.

செம்மணி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட...

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....