4 26 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

Share

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

கனடா – இந்தியாவுக்கு இடையே இறுக்கமான சூழல் நீடித்துவரும் நிலையில், கனடாவில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்காலம் தொடர்பில் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையை அடுத்து, இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் கனடாவுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இந்த கொலை விவகாரத்தில் விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கனடாவுக்கான விசா சேவைகளை இந்திய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது தற்போது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தளை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய மாணவர்கள். இதன் மூலம் கனடா பெரும் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும், கனேடிய தனியார் பல்கலைக்கழகங்கள் பல சர்வதேச மாணவர்கள் மூலம் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்றன.

இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 1.36 லட்சம் மாணவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்கின்றனர்.

இதனூடாக கனேடிய பொருளாதாரம் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ.68,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு இடம்பெயரும் மொத்த இந்திய மாணவர்களில், 60 சதவீத மாணவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.

இதுவே, கனடாவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகமாக புழங்கும் ஒரு நாடாக மாற்றியுள்ளது. கனடாவுக்கான விசா சேவையை இந்தியா இடைநிறுத்தினாலும், இந்திய மாணவர்களுக்கான விசா சேவை தொடரும் என்றே கனடா அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...